
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் எஸ்பி :-
ராணிப்பேட்டை – 27
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 26.02.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 33 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ராமச்சந்திரன் (DCRB), ரமேஷ் ராஜ் (DCB) மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

