தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

தமிழ்நாட்டில் மருத்துவத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனங்கள் வெளியிட்டுள்ளார். மக்களின் நல்வாழ்வுத் துறை, உயிரைக் காக்கும் துறையா அல்லது உயிரைப் பறிக்கும் துறையா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் சாதனைப் துறையாக இருந்த நல்வாழ்வுத் துறை, திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறிவிட்டதாகவும், அமைச்சர்கள் சீரிய நடவடிக்கைகளை எடுக்காமல், அரசின் நெருங்கியவர்களுக்கு மட்டுமே சாதகமான முறையில் செயல்படுவதாகவும் அவர் குறித்தார்.

தனது அறிக்கையில் அவர் கூறியதாவது:

“2021ஆம் ஆண்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மருத்துவத் துறையில் பல விரும்பத் தகாத நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. நான் இவை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தும், எந்தவித தீர்வு எடுக்கப்படவில்லை. மாற்றமாக, மா.சுப்பிரமணியம் போன்ற அமைச்சர்கள், அரசின் தவறுகளை மறைப்பதில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.”

தற்போது சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களையும், அமைச்சர்களின் இரட்டை நிலைப்பாட்டையும் அவர் கடுமையாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக, யூடியூபர் இர்ஃபானை சார்ந்த சம்பவங்களைத் தொடர்ந்து, அந்த வழக்குகளில் துரித நடவடிக்கை எடுக்கப்படாததையும், ஒருசிலருக்கே சட்டம் கடுமையாகப் பிரயோகிக்கப்படுவதையும் விளக்கினார்.

திமுக ஆட்சியில் அரசியல் ஆதரவாளர்கள் மட்டும் பாதுகாக்கப்படுகிறார்கள், ஆனால் சாமான்ய மக்கள் உரிய நீதியை பெற முடியாமல் இருக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

அவரது அறிக்கையின் இறுதியில், “தமிழக மக்கள் சமரசம் செய்யும் பண்புடையவர்கள் ஆனால், தங்களுக்கு ஏற்புடைய நேரத்தில் இந்த அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து விடுவார்கள்,” என்று கூறினார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *