விதிகளை மீறி கருக்கலைப்பு.. 3 தனியார் மருத்துவமனைகளுக்கு சீல்!

விதிகளை மீறி கருக்கலைப்பு.. 3 தனியார் மருத்துவமனைகளுக்கு சீல்!

சேலம் அருகே வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டரில் விதிமுறையை மீறி கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா? என்ற பாலினத்தை கண்டறிந்துதெரிவித்து வருவது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் இந்த மையத்தை நடத்தி வந்த ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய இரண்டு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விதிமுறையை மீறி பாலினம் கண்டறிந்த விவகாரம்:
மேலும் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வாழப்பாடி மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கிராம சுகாதார செவிலியர்கள் அம்பிகா வனிதா வசந்தி மங்கை ராணி கலைச்செல்வி மகேஸ்வரி ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மருத்துவக் குழுவினர் நடத்திய விசாரணையில் சேலம் டவுன் மேட்டு தெருவில் உள்ள தனியார் மருத்துவமனை பொன்னம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை பெரிய புதூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளுக்கும் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

கருக்கலைப்பு செய்த மருத்துவமனைகளுக்கு சீல்:
மேலும் இந்த மருத்துவமனைகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் மூன்று தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் கிருஷ்ணகிரி சேலம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 26 ஆம் தேதி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்கேன் சென்டரில் அதிரடி ஆயுதம் மேற்கொண்டனர் அது சம்பவத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையையே மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருத்துவமனைகள் திறந்துவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில் அந்த மூன்று மருத்துவமனைகளுக்கும் அதிரடியாக சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *