“முன்னும் பின்னும் எடிட் பண்ணிட்டு கேட்டா மிரட்டுற மாதிரி தான் இருக்கும்!” – தருமபுரி தர்மச்செல்வன் தன்னிலை விளக்கம்

“முன்னும் பின்னும் எடிட் பண்ணிட்டு கேட்டா மிரட்டுற மாதிரி தான் இருக்கும்!” – தருமபுரி தர்மச்செல்வன் தன்னிலை விளக்கம்

“நான் சொல்வதை கலெக்டர், எஸ்பி கேட்க வேண்டும். நான் சொல்வதைத்தான் அனைத்து நிர்வாகங்களும் கேட்க வேண்டும். இங்கே கேம் ஆட இடம் கிடையாது. ஆடினால் அவன் கதை முடிந்தது” – திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் (பொறுப்பு) தர்மச்செல்வன் பேசிய இந்த தாம் தூம் பேச்சு வைரலாகி, திமுக தலைமைக்கு தர்சங்கடத்தை உண்டாக்கி இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் குறுநில மன்னர்களைப் போல் செயல்படுவதாக அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிக்கட்சிகள் வரிந்துகட்டியுள்ளன. 27-ம் தேதி தரு​மபுரி​யில் கிழக்கு மாவட்ட திமுக-​வின் செயற்​குழு கூட்​டம் நடந்​தது.

சுமார் 25 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தான் தர்மச் செல்வன் இப்படிப் பேசி இருக்கிறார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளரான பி.என்.பி.இன்பசேகரனுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படாத ஆதங்கத்தில் அவரது ஆதரவாளர்களே இந்த வீடியோவை வைரலாக்கி இருக்கிறார்கள் என்றும், கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தடங்கம் சுப்பிரமணியின் ஆதரவாளர்கள் தான் இதை பரப்பி இருக்கிறார்கள் என்றும் திமுக வட்டாரத்தில் பலவாறாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், தர்மச்செல்வனை அவசரமாக சென்னைக்கு அழைத்து விளக்கம் கேட்டு ‘புத்தி சொல்லி’ அனுப்பி இருக்கிறது திமுக தலைமை.

இது தொடர்பாக, சென்னையில் இருந்த தர்மச்செல்வனிடம் பேசினோம். “எனது மாவட்டத்துக்குள் பென்னாகரம், தருமபுரி தொகுதிகள் வருகிறது. 2021 தேர்தலில் பென்னாகரத்தில் 21 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்திலும், தருமபுரியில் 26 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்திலும் திமுக தோற்றுள்ளது. மக்களவை தேர்தலில் தருமபுரியில் திமுக வெற்றி பெற்றபோதும், பென்னாகரத்தில் 11 ஆயிரத்து 500 வாக்குகளும், தருமபுரியில் 13 ஆயிரத்து 500 வாக்குகளும் பாமக-வை விட திமுக-வுக்கு குறைவாகவே கிடைத்தது.

தரு​மபுரி​யின் 2 சட்​டப் பேரவை தொகு​தி​களில் கட்சி இப்​படி பலவீனமடைந்​துள்ள சூழலில் திமுக தலை​வர் என்னை நம்பி பொறுப்பு வழங்​கி​யுள்​ளார். 2026 தேர்​தலில் அதி​முக, பாமக, பாஜக கட்​சிகள் கூட்​டணி அமைத்​துப் போட்​டி​யிட்​டாலும் என் தொகு​தி​களின் வெற்​றியை தலை​மைக்கு சமர்ப்​பிக்க வேண்​டிய பொறுப்பு எனக்​குள்​ளது. இதை நோக்​க​மாக வைத்​துத்​தான் செயற்​குழு கூட்​டத்​தில் பேசினேன். முன்​ன​தாக, நிர்​வாகி​களின் மனக் குமுறல்​கள், கோரிக்​கைகளை பற்​றியெல்​லாம் கேட்​டேன்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *