திமுகவை கண்டித்து பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி! : அண்ணாமலை அறிவிப்பு!

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி! : அண்ணாமலை அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையில் முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்து, தமிழக பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி வரும் ஜனவரி 3 அன்று நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பாஜக  மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் குமாரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.

வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கபட்டுள்ளது.


source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *