தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், இரண்டு நாட்கள் முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ஆக வலுவடைந்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்:
கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இன்று, இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு வடமேற்காக நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மைய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம். அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, இலங்கை கரையை நோக்கி நகரும்.
source

