சிறுமலையில் மோசடி செய்த காட்டேஜ்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் அபராதம்

சிறுமலையில் மோசடி செய்த காட்டேஜ்களுக்கு மின்வாரிய அதிகாரிகள் அபராதம்

சிறுமலையில் வீடுகள் போல் காட்டேஜ்களுக்கு மின் இணைப்புகள் பெற்று மோசடி செய்த 3 காட்டேஜ்களுக்கு மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள் ரூ.1.20 லட்சம் அபராதம்

திண்டுக்கல், சிறுமலையில் புதிதாக கட்டப்படும் காட்டேஜ்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு பெறுவதை போல் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து அனுமதியை பெறுகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மின்வாரிய அமலாக்கத்துறை அதிகாரிகள், மின்வாரிய முன்னாள் ராணுவ வீரர்கள் குழுவினர் சிறுமலையில் உள்ள காட்டேஜ்களில் ஆய்வு செய்தனர். 33 காட்டேஜ்களில் ஆய்வுகள் நடந்த நிலையில் 3 காட்டேஜ்களில் வீடுகளுக்கு பெறுவது போல் மின் இணைப்புகள் பெறப்பட்டது கண்டறியப்பட்டது.

சம்பந்தபட்ட 3 காட்டேஜ் உரிமையாளர்களுக்கும் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு முறையாக மின் இணைப்புகள் மாற்றப்பட்டது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *