குடித்துக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தி குத்து!

குடித்துக் கொண்டிருந்த வாலிபருக்கு கத்தி குத்து!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ஆனந்தராஜ் (38) இவருக்கு துளசி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன.

இவர் நேற்று முன்தினம் இரவு தெருவில அமர்ந்து குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

 இந்த நிலையில் அந்த வழியாக வந்த மர்ம நபர் தன் வைத்திருந்த கத்தியால் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் சரா மாறியாக ஆனந்தராஜை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார்  கலைஞர் நகர் பகுதிக்கு சென்று கத்தியால் குத்தி தப்பிச்சென்ற மர்ம நபர் குறித்தும் மேலும் ஆனந்தராஜுக்கும் மற்றொரு நபருடன் ஏதேனும் முன்பகை ஏதேனும் இருந்து வருகிறதா  எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *